sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வலுவான வேட்பாளர் உண்டா? அஜித் பவாருக்கு சுப்ரியா சவால்!

/

வலுவான வேட்பாளர் உண்டா? அஜித் பவாருக்கு சுப்ரியா சவால்!

வலுவான வேட்பாளர் உண்டா? அஜித் பவாருக்கு சுப்ரியா சவால்!

வலுவான வேட்பாளர் உண்டா? அஜித் பவாருக்கு சுப்ரியா சவால்!


ADDED : பிப் 19, 2024 01:27 AM

Google News

ADDED : பிப் 19, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:''அஜித் பவாருடன் நான் நிகழ்த்துவது கொள்கை ரீதியிலான போர் தானே தவிர, தனிப்பட்ட குடும்ப சண்டை இல்லை. என்னை எதிர்க்க அவர்கள் வசம் வலுவான வேட்பாளர் இருந்தால், அவரை சந்திக்க தயார்,'' என, தேசியவாத காங்., - சரத் பவார் பிரிவைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலே தெரிவித்துஉள்ளார்.

மஹாராஷ்டிராவின் தேசியவாத காங்.,கில் அங்கம் வகித்த அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் விலகி வந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஆனார். தேசியவாத காங்., பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆதரவு உடைய அஜித் பவார் அணியை உண்மையான தேசியவாத காங்., என, தேர்தல் கமிஷனும், சபாநாயகரும் அறிவித்தனர்.

கட்சியின் பெயரும், கடிகார சின்னமும், அஜித் பவார் வசம் வந்தது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு என பெயர் மாற்றம் பெற்றது.

இந்நிலையில், வருகிற லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில், சரத் பவாரின் மகளும், தற்போதைய எம்.பி.,யுமான சுப்ரியா சுலேவை எதிர்த்து, அஜித் பவாரின் மனைவி சுனேந்திரா பவார் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் பரவின.

இது குறித்து, சுப்ரியா சுலே நேற்று கூறியதாவது:

அவர்கள் வசம் வலுவான வேட்பாளர் இருந்தால் அவரை நிறுத்தட்டும். அவருடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன்.

விவாதத்திற்கான தலைப்பு, இடம், நேரம் முடிவு செய்து சொல்லட்டும். நான் தயார். அஜித் பவாருடன் எனக்கு இருப்பது கொள்கை ரீதியிலான போர். இதில் தனிப்பட்ட குடும்ப சண்டை எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us