sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாக்குறுதியை மீறி ரத யாத்திரை 'இஸ்கான்' அமைப்புக்கு கண்டனம்

/

வாக்குறுதியை மீறி ரத யாத்திரை 'இஸ்கான்' அமைப்புக்கு கண்டனம்

வாக்குறுதியை மீறி ரத யாத்திரை 'இஸ்கான்' அமைப்புக்கு கண்டனம்

வாக்குறுதியை மீறி ரத யாத்திரை 'இஸ்கான்' அமைப்புக்கு கண்டனம்


ADDED : நவ 12, 2024 12:11 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசா அரசு மற்றும் புரி கஜபதி மஹாராஜாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறி, 'இஸ்கான்' அமைப்பு அமெரிக்காவில் ரத யாத்திரை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்துக்கு, உலகெங்கிலும் பக்தர்கள் உள்ளனர். பல நாடுகளில் கிளைகள் அமைத்து பக்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் இஸ்கான் அமைப்பு, அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகிறது.

வீதிகளில் வலம்


அங்கு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில், இஸ்கான் அமைப்பு சார்பில் கடந்த 9ம் தேதி ரத யாத்திரை நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் நந்திகோசா தேர் போன்ற வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட தேர், நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

புரி ஜெகன்நாதரை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட தேரில் ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா, சுதர்சன் சக்ரா ஆகிய கடவுள்களின் உருவ சிலைகள் இடம்பெறாதது ஒடிசா மக்கள் மற்றும் புரி ஜெகன்நாதர் பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இது குறித்து புரி கோவர்தன் பீட செய்தி தொடர்பாளர் மாத்ரு பிரசாத் மிஷ்ரா கூறியதாவது:


புரி ஜெகன்நாதர், சுபத்ரா உள்ளிட்டோரின் சிலைகள் ரத யாத்திரையில் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

வெளிநாடுகளில் ரத யாத்திரை நடத்த மாட்டோம் என ஒடிசா அரசுக்கும், புரி கஜபதி மஹாராஜாவுக்கும் இஸ்கானின் ஹூஸ்டன் கிளை உறுதியளித்துள்ளது.

வாக்குறுதியை மீறி ரத யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. இது எங்கள் மதத்திற்கு எதிரான சதி. ஆகையால், நம் நாட்டில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை

இதற்கு பதிலளித்து, இஸ்கான் அமைப்பின் ஹூஸ்டன் கிளையின் தலைவர் சாரங்கா தாகூர் தாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜெகன்நாதர் உள்ளிட்டோரின் திருவுருவ சிலைகளுடன் ரத யாத்திரை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. உள்ளூர் சமூகத்தில் உள்ள எங்கள் நண்பர் குழுவின் ஆலோசனைபடி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

'விழாவில் பங்கேற்பவர் புரி ஜெகன்நாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்பதே இஸ்கானின் நோக்கம்.

'அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள புரி அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, இது தொடர்பாக விரிவாக விவாதித்து பரஸ்ரம் நட்பு பேணப்படும்' என்றார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ஒடிசா சட்ட அமைச்சர் பிரித்விராஜ் ஹரிச்சந்திரன் கூறுகையில், “புரி ஜெகன்நாதர் கோவில் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு, மாநில அரசு கட்டுப்பட தயாராக உள்ளது,” என்றார்.






      Dinamalar
      Follow us