sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐ.நா., படை மீது இஸ்ரேல் தாக்குதல்; வீரர்களை அனுப்பிய இந்தியா கவலை!

/

ஐ.நா., படை மீது இஸ்ரேல் தாக்குதல்; வீரர்களை அனுப்பிய இந்தியா கவலை!

ஐ.நா., படை மீது இஸ்ரேல் தாக்குதல்; வீரர்களை அனுப்பிய இந்தியா கவலை!

ஐ.நா., படை மீது இஸ்ரேல் தாக்குதல்; வீரர்களை அனுப்பிய இந்தியா கவலை!

11


ADDED : அக் 11, 2024 06:13 PM

Google News

ADDED : அக் 11, 2024 06:13 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அங்கு அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து உள்ளது.

உலகின் உள்நாட்டு கலவரம் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஐ.நா., பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அதில் இந்திய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அதில் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ஐ.நா., விருது வழங்கி கவுரவித்து உள்ளது. லெபனானில் மட்டும் 600 இந்திய வீரர்கள் அமைதிப்படையில் பணியாற்றுகின்றனர்.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அமைதிப்படை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா., கூறியிருந்தது.

இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லெபனானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து கவலைப்படுகிறோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஐ.நா., அமைப்பு மற்றும் அதன் இடங்களை மதிக்க வேண்டும். ஐ.நா., அமைதிப்படையினர் மற்றும் அவர்களின் பணியின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us