sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செயற்கை சூரிய கிரகணம் உருவாக்கும் செயற்கைக்கோள்; நவ.,29ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

/

செயற்கை சூரிய கிரகணம் உருவாக்கும் செயற்கைக்கோள்; நவ.,29ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

செயற்கை சூரிய கிரகணம் உருவாக்கும் செயற்கைக்கோள்; நவ.,29ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

செயற்கை சூரிய கிரகணம் உருவாக்கும் செயற்கைக்கோள்; நவ.,29ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

2


ADDED : அக் 21, 2024 09:27 AM

Google News

ADDED : அக் 21, 2024 09:27 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் 'புரோபா-3' செயற்கைக்கோள் நவம்பர் 29ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து, விண்வெளியில் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்க, 'புரோபா-3' என்ற இரட்டை செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.

விண்ணில் இருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் வகையில் இந்த இரட்டை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 'புரோபா-3' செயற்கைக்கோள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு இன்று அந்த இரட்டை செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. சற்று வித்தியாசமான சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.

சிறப்பு அம்சங்கள் என்ன?

* இந்த இரட்டை செயற்கைக்கோளும் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கக் கூடிய சக்தி கொண்டவை.

* அதிக நீள்வட்ட சுற்றுப்பாதையை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கும்.

* சந்திரயான்-4 உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு உதவியாக இந்த திட்டம் இருப்பதால் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

* இந்த நுட்பம் சூரியனின் கரோனாவை (corona) நீண்ட நேரம் கண்காணிக்கும்.






      Dinamalar
      Follow us