sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!

/

இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!

இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!

இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!

7


ADDED : டிச 25, 2025 07:48 AM

Google News

7

ADDED : டிச 25, 2025 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ', நேற்று வணிக ரீதியிலான, அமெரிக்க தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் செலுத்தி, இந்திய பொருளாதாரத்துக்கு புதிய பாதையை திறந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில், வெளிநாட்டு நிறுவன செயற்கைக்கோள்களை அனுப்பும் வணிகத் திட்டத்தின் புதிய சாதனையாக, 6,100 கிலோ எடையுள்ள ராக்கெட் வாயிலாக, புதிய செயற்கைக்கோளை செலுத்தி, உலக நாடுகளை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இதற்கு, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

என்னென்ன சிறப்புகள்?


* எல்.வி.எம்., 3 - எம் 6 ராக்கெட் வாயிலாக, அமரிக்காவின், 'புளூபேர்ட் பிளாக் 2' செயற்கைக்கோள் செலுத்தும் திட்டத்தை, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த, 52வது நாளில் முடித்து, இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.

* தற்போது ஏவப்பட்டுள்ள, 'புளூபேர்ட் பிளாக் 2' செயற்கைக்கோள், 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் உள்ள மொபைல் போன்களுக்கான ஒலி மற்றும் ஒளி எனும் ஆடியோ, வீடியோ அழைப்புகளை, 'மொபைல் டவர்'கள் இல்லாமலேயே மிகத்துல்லியமாக வழங்கும்.

* இது, கடலின் நடுவிலும், கண்ணாடி அறைக்குள்ளும் மிகத்துல்லியமான சேவையை வழங்கி, புதிய தலைமுறை தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும். அதிவேக 'செல்லுலார் பிராட்பேண்ட்' சேவைகளையும், எந்தவித துணை கருவிகளும் இல்லாமல் நேரடியாக வழங்கும்.

Image 1512931

அமெரிக்காவும், இந்தியாவும்


இஸ்ரோ, தன் மிகக்குறைந்த எடையுள்ள செயற்கைக்கோளை, அமெரிக்காவின் உதவியுடன், கடந்த 1963ல், முதன்முதலில் விண்ணில் ஏவியது. அப்போது, விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத் துறையில், இந்தியா 60 ஆண்டுகள் பின்தங்கி இருந்தது. தற்போது, அமெரிக்க நிறுவனமே, அதன் மிகசக்தி வாய்ந்த செயற்கைக்கோளை, வட்டப்பாதையில் நிலைநிறுத்த, இந்திய ஆய்வு நிறுவனத்தை நாடி வந்துள்ளது.








      Dinamalar
      Follow us