sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜெ., நகைகள் வழக்கு ஏப்., 6க்கு ஒத்திவைப்பு

/

ஜெ., நகைகள் வழக்கு ஏப்., 6க்கு ஒத்திவைப்பு

ஜெ., நகைகள் வழக்கு ஏப்., 6க்கு ஒத்திவைப்பு

ஜெ., நகைகள் வழக்கு ஏப்., 6க்கு ஒத்திவைப்பு


ADDED : மார் 07, 2024 03:45 AM

Google News

ADDED : மார் 07, 2024 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடம் ஒப்படைக்கும் மனு மீது விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், பவளம், முத்து போன்றவைகளால் செய்யப்பட்ட நகைகள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நகைகளை, நேற்று தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. இதற்காக தமிழக அதிகாரிகளை வரும்படியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசிடம் நகைகளை ஒப்படைக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் இடைக்கால தடை பிறப்பித்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில், இந்த மனு மீது நேற்று விசாரணை நடக்கவிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஏப்ரல் 6ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us