sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாருக்கு ஜாக்பாட்: அதிக திட்டங்கள் அறிவிப்பு

/

பீஹாருக்கு ஜாக்பாட்: அதிக திட்டங்கள் அறிவிப்பு

பீஹாருக்கு ஜாக்பாட்: அதிக திட்டங்கள் அறிவிப்பு

பீஹாருக்கு ஜாக்பாட்: அதிக திட்டங்கள் அறிவிப்பு


ADDED : பிப் 01, 2025 11:47 PM

Google News

ADDED : பிப் 01, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இந்த மாநிலத்துக்கு அதிக திட்டங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உணவு பதப்படுத்தலை ஊக்குவிக்கும் விதமாக பீஹாரில், 'தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்' அமைக்கப்படும்.

நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக பாட்னா ஐ.ஐ.டி.,யின் திறன் விரிவுபடுத்தப்படும். இதில் 6,500 மாணவர்களுக்கு இடமளிக்க ஐந்து ஐ.ஐ.டி.,களில் கூடுதல் உட்கட்டமைப்பு உருவாக்கப்படும்.

பீஹாரின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக பாட்னா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். நான்கு புதிய 'க்ரீன்பீல்ட்' எனப்படும் பசுமை விமான நிலையங்கள் மற்றும் பிஹ்தாவில் 'பிரவுன்பீல்ட்' எனப்படும் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ஒரு விமான நிலையம் அமைக்கப்படும்.

மிதிலாஞ்சல் பகுதியில் நடந்துவரும் சுற்றுச்சூழல் வள மேலாண்மை திட்டமான 'கோசி' கால்வாய் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us