sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அயோத்திக்கு செல்ல மாட்டேன் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்

/

அயோத்திக்கு செல்ல மாட்டேன் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்

அயோத்திக்கு செல்ல மாட்டேன் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்

அயோத்திக்கு செல்ல மாட்டேன் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்


ADDED : ஜன 20, 2024 05:57 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: “ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு, எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வரவில்லை. எனவே நான் அயோத்திக்கு செல்ல மாட்டேன்,” என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:

ராமர் கோவில் விஷயத்தில், அரசியல் செய்ய கூடாது. நானும் ராம பக்தன். ராமர் கோவில் கட்ட பணம் சேகரித்து தரும்படி கேட்டபோது, 2 கோடி ரூபாய் சேகரித்துக் கொடுத்தேன். கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், அழைப்பு வரவில்லை. எனவே, என்னால் அயோத்திக்கு செல்ல முடியாது.

வேறு நாளன்று அயோத்திக்கு சென்று, ராமனை தரிசிப்பேன். அழைப்பு வந்தவர்கள் வெவ்வேறு காரணங்களால், அயோத்திக்கு செல்லவில்லை என, காங்கிரசார் கூறினர். இதை பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர்.

ராமர் கோவில் திறக்கப்படுவது, மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். அழைப்பு வந்தவர்கள் செல்வதும், விடுவதும் அவரவர் விருப்பமாகும்.

காங்கிரஸ், ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல. அப்படி இருந்திருந்தால், 135 தொகுதிகள் எப்படி கிடைத்தன. நான் பா.ஜ.,வுக்கு செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.என்னை அந்த கட்சி தலைவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

அப்போது எனக்கு பா.ஜ.,வில் அவமதிப்பு நடந்தது. அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டியிருந்தது; புகட்டினேன். காங்கிரசில் திருப்தியாக இருக்கிறேன்.

நான் எந்த ஆசையும் வைத்துக்கொண்டு, காங்கிரசுக்கு வரவில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டேன் என, பல முறை கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us