sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநில சிறப்பு அந்தஸ்து பற்றி வாய் திறக்காத ஜெகன்மோகன்: அண்ணனை விமர்சித்த ஷர்மிளா

/

மாநில சிறப்பு அந்தஸ்து பற்றி வாய் திறக்காத ஜெகன்மோகன்: அண்ணனை விமர்சித்த ஷர்மிளா

மாநில சிறப்பு அந்தஸ்து பற்றி வாய் திறக்காத ஜெகன்மோகன்: அண்ணனை விமர்சித்த ஷர்மிளா

மாநில சிறப்பு அந்தஸ்து பற்றி வாய் திறக்காத ஜெகன்மோகன்: அண்ணனை விமர்சித்த ஷர்மிளா


ADDED : மார் 08, 2024 03:34 PM

Google News

ADDED : மார் 08, 2024 03:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது போராட்டம் நடத்திய ஜெகன்மோகன், முதல்வராகி 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எங்கும் வாய் திறக்கவில்லை என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், காங்., மாநில தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு ஆந்திர மாநில காங்., தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: ஆந்திராவின் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து மிகவும் முக்கியம். அது நமது உரிமை; அது மட்டும் வந்திருந்தால் நம் பிள்ளைகள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டிய நிலை வந்திருக்காது.

தாய் போன்ற தனது மாநிலத்தின் முதுகில் குத்தியுள்ளார் முதல்வர் ஜெகன்மோகன். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்காக போராட்டம் நடத்தினார். ஆனால் முதல்வரான பின்னர் ஒருமுறை கூட இது குறித்து எங்கும் வாய் திறக்கவில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், முதல் கையெழுத்து ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோப்பில்தான் என காங்., எம்.பி., ராகுல் எனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே நான் காங்கிரசில் இணைந்தேன்.

மாநில பிரிவினைக்கு பின்னர் 5 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது அவர் மத்தியில் ஆட்சியிலிருந்த பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தார். அவரும் மாநில சிறப்பு அந்தஸ்தை பெறவில்லை. அதற்கு அடுத்ததாக என் அண்ணன் ஜெகன் 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்தும், அது சம்பந்தமாக பேச்சே எடுக்கவில்லை. இருவரும் பா.ஜ.,வுக்கு துணை போகவே நேரம் சரியாக இருந்தது. இப்போதும் கூட ஆந்திராவில் பா.ஜ.,வுக்கென ஒரு எம்.பி.,யோ, எம்எல்ஏ.,வோ இல்லை. ஆனாலும், பா.ஜ.,வின் சொல்படிதான் ஆந்திராவில் ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us