முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு; டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு; டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
UPDATED : ஜன 12, 2026 07:50 PM
ADDED : ஜன 12, 2026 07:47 PM

புதுடில்லி: முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நிலை கோளாறு காரணமாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நிலை காரணங்களை காட்டி கடந்தாண்டு ஜூலை 21ம் தேதி தமது துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்திருந்தார். பொது வெளியில் எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்து வந்தார்.
ஜன.10ம் தேதி கழிவறைக்குச் சென்ற போது இருமுறை மயக்கம் அடைந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந் நிலையில் ஜக்தீப் தன்கர், டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனைக்கு அவர் பரிசோதனை செய்ய சென்ற போது, சேர்க்கப்பட்டு உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

