sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜே.டி.யு.,ஆதரவு வாபஸ்: ஆயினும் மணிப்பூர் அரசுக்கு ஆபத்து இல்லை

/

ஜே.டி.யு.,ஆதரவு வாபஸ்: ஆயினும் மணிப்பூர் அரசுக்கு ஆபத்து இல்லை

ஜே.டி.யு.,ஆதரவு வாபஸ்: ஆயினும் மணிப்பூர் அரசுக்கு ஆபத்து இல்லை

ஜே.டி.யு.,ஆதரவு வாபஸ்: ஆயினும் மணிப்பூர் அரசுக்கு ஆபத்து இல்லை


ADDED : ஜன 22, 2025 06:29 PM

Google News

ADDED : ஜன 22, 2025 06:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசுக்கு அளித்த ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) வாபஸ் பெற்றுள்ளது. வாபஸ் பெற்ற போதிலும் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் பா.ஜ., தற்போது 37 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நாகா மக்கள் முன்னணியின் ஐந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் மூன்று சுயேச்சைகளின் ஆதரவுடன், அது வசதியான பெரும்பான்மை பெற்றுள்ளது. மணிப்பூரில் 2022 சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு ஆறு இடங்களை வென்றது.ஆனால் தேர்தல்களுக்குப் பிறகு, ஐந்து எம்.எல்.ஏக்கள் பா.ஜ.,வுக்கு மாறினர். இது ஆளும் கட்சியின் எண்ணிக்கையை பலப்படுத்தியது. இந்நிலையில் நிதிஷ்குமாரின் ஜே.டி.யு., க்கு ஒரு எம்.எல்.ஏ., மட்டும் தான் உள்ளார்.

ஜனதா தளம் (ஐக்கிய), மணிப்பூர் பிரிவு மணிப்பூரில் உள்ள பா.ஜ., தலைமையிலான மாநில அரசை ஆதரிக்கவில்லை என்பதையும், எங்கள் ஒரே சட்டமன்ற உறுப்பினர் முகமது அப்துல் நசீர் அவையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராகக் கருதப்படுவார் என்பதை ஜே.டி.யு., தலைமை தெரிவித்துள்ளது.

இந்த அரசியல் நிகழ்வு, மணிப்பூர் அரசின் ஸ்திரத்தன்மையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், இது ஒரு வலுவான அடையாள நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜே.டி.யு மத்தியிலும் பீகாரிலும் பா.ஜ.,வின் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜே.டி.யு., தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறியதாவது:

இது தவறானது மற்றும் ஆதாரமற்றது. கட்சி தலைமை இதை உணர்ந்து, மணிப்பூர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்துள்ளோம்.

மணிப்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்கு எங்கள் ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும். மணிப்பூர் பிரிவு மத்திய தலைமையுடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர் (மணிப்பூர் ஜேடியு தலைவர்) தானே இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.

இதை ஒழுக்கக்கேடான செயலாகக் கருதி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரது பதவியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறோம், மாநிலக் கட்சி மணிப்பூர் மக்களுக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து சேவை செய்யும்.

இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறினார்.






      Dinamalar
      Follow us