sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரசுக்கு பொறாமை: பிரதமர் மோடி சாடல்

/

காங்கிரசுக்கு பொறாமை: பிரதமர் மோடி சாடல்

காங்கிரசுக்கு பொறாமை: பிரதமர் மோடி சாடல்

காங்கிரசுக்கு பொறாமை: பிரதமர் மோடி சாடல்


ADDED : ஏப் 14, 2024 02:03 PM

Google News

ADDED : ஏப் 14, 2024 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹோஷங்காபாத்: ‛‛ காங்கிரஸ் உள்ளங்களில் பொறாமை உள்ளது'', எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ் கட்சி அவருக்கு கொடுக்காத மரியாதையை நாங்கள் கொடுத்தோம். அவரை அவமதிக்கும் வகையிலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்பட்டு உள்ளன. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்சாசனம் காரணமாகவே, ஏழைத்தாயின் மகனாகிய மோடி, 3வது முறை உங்களுக்கு சேவை செய்ய உங்களின் ஆசி வேண்டி வந்துள்ளேன். ஆதிவாசிகளின் பங்களிப்பை காங்கிரஸ் எப்போதும் அங்கீகரித்தது கிடையாது. பழங்குடியினரை பா.ஜ., அரசு பெருமைப்படுத்தி உள்ளது.

மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆனால் நாடு எரியும் என காங்கிரஸ் அரச குடும்பம் மிரட்டுகிறது. 2014, 19 ல் இதேபோல் தான் செய்தனர். அப்படி எதுவும் நடந்ததா? இன்று நாட்டில் நெருப்பு இல்லை. அவர்கள் உள்ளங்களில் தான் பொறாமை இருக்கிறது. பிரிவினை மற்றும் அச்சுறுத்தல் அரசியலில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டு உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான். வரலாற்று உண்மைகளை திரித்ததும் அக்கட்சி தான்.

உலகத்தின் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் பார்த்து கொண்டு உள்ளீர்கள். உலகில் உள்ள அனைவரும் அச்சத்தின் நிழலில் வாழ்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ, என்ன பிரச்னை வருமோ என்று நடுங்கிக் கொண்டு உள்ளனர். அத்தகைய உலகத்திற்கு வலிமையான மற்றும் சக்தியான இந்தியா தேவைப்படுகிறது. இந்தியாவை நிலைநிறுத்த வலிமையான அரசு தேவை. உங்களின் ஓட்டே வலிமையான இந்தியாவை கட்டமைக்கும். ‛இண்டியா' கூட்டணி கட்சிகள், அவர்களின் தேர்தல் அறிக்கை காரணமாக குழம்பி போயுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை திவாலாக்கி விடும்.

நாட்டை பாதுகாக்க அணு ஆயுதங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் பாதுகாக்க முடியாது. ஆனால், அதனை ஒழித்துக்கட்ட காங்கிரஸ் முயற்சி செய்கிறது. நாட்டை அபாய நிலையில் தள்ள அக்கட்சி விரும்புகிறது. நாட்டை எந்த திசையில் இயக்க வேண்டும் என முடிவெடுக்க முடியாமல் ‛ இண்டியா ' கூட்டணி குழம்பி வருகிறது. எனது 10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரைலர் தான். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us