sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி

/

உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி

உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி

உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி

2


ADDED : ஜூலை 15, 2025 09:33 PM

Google News

2

ADDED : ஜூலை 15, 2025 09:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள முவானி நகரில் உள்ள பாலத்தில் 13 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பொலேரோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பொலேரோ ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜினில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு விபத்திற்கு காரணம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், காயமடைந்த அனைவருக்கும் சரியான நேரத்தில், இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us