தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப்
தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப்
UPDATED : பிப் 20, 2025 02:53 PM
ADDED : பிப் 20, 2025 02:28 AM

ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், உக்ரைனை ஒதுக்குகிறார்.
உக்ரைனில் 2019ல் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி, நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
இதைக் குறிப்பிடும் வகையில், டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள செய்தி:
ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து, போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்.
அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும்.
இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

