ADDED : ஜூலை 28, 2011 05:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்பாத் : மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக, ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
தும்காவில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் முண்டா, ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12.05 மணியளவில் புறப்பட்டார். ஹெலிகாப்டர் புறப்பட்ட 10 நிமிடத்திற்குள் ஹெலிகாப்டர் எவ்வித முன்னறிவிப்புமின்றி அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனால், அங்கு பெரும்பரபரப்பு நிலவியது.

