sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சர்க்கார் உத்தியோகம், போடுங்க ஒரு சல்யூட்! திருநங்கைக்கு வாய்ப்பு தந்த ஜார்க்கண்ட்

/

சர்க்கார் உத்தியோகம், போடுங்க ஒரு சல்யூட்! திருநங்கைக்கு வாய்ப்பு தந்த ஜார்க்கண்ட்

சர்க்கார் உத்தியோகம், போடுங்க ஒரு சல்யூட்! திருநங்கைக்கு வாய்ப்பு தந்த ஜார்க்கண்ட்

சர்க்கார் உத்தியோகம், போடுங்க ஒரு சல்யூட்! திருநங்கைக்கு வாய்ப்பு தந்த ஜார்க்கண்ட்

2


ADDED : ஆக 31, 2024 09:37 AM

Google News

ADDED : ஆக 31, 2024 09:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில், அரசு வேலையில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அவர்கள் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களை பெறமுடியும். அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது மாநிலத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் அரசு பணியில் சேர்ந்துள்ளார்.

மேற்கு சிங்புங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமிர் மகதோ. சம்பல்புர் கிராமத்தில் செவிலியர் பயிற்சியை நிறைவு செய்தார். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செவிலியர் பயிற்சி பூர்த்தி செய்தவர்களுக்கு சுகாதாரத் துறையில் அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அமிர் மகதோவுடன் சேர்த்து மொத்தம் 365 பேர் பயிற்சியை நிறைவு செய்து அரசு பணிக்கு தேர்வாகி இருக்கின்றனர். அனைவருக்குமான பணி ஆணையை முதல்வர் ஹேமந்த் சோரன் வழங்கி உள்ளார். இது குறித்து அமிர் மகதோ கூறி உள்ளதாவது;

எனது தாய்க்கு செவிலியராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால் பொருளாதாரம், குடும்பச்சூழல் காரணமாக அவரது லட்சியம் கனவாகவே போனது. எனவே என்னை செவிலியராக பணியில் அமர்த்த வேண்டும் என்று எண்ணினார். அவரது கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது.

நான் தற்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறையில் சேர்ந்துள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மிக்க நன்றி என்று கூறி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில அரசின் இத்தகைய நடவடிக்கையை பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us