sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!

/

தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!

தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!

தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!

10


UPDATED : மார் 22, 2025 07:13 PM

ADDED : மார் 22, 2025 06:30 PM

Google News

UPDATED : மார் 22, 2025 07:13 PM ADDED : மார் 22, 2025 06:30 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: '' மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது'' என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் என ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அடுத்த கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



இக்கூட்டம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்த கூட்டத்தை நான் வரவேற்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

ஆய்வு


தொகுதி மறுவரையறை தொடர்பாக ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: இதற்கு முன்பாகவும், தொகுதி மறு வரையறை செய்வதற்கான முயற்சிகள் நடந்தன. மாநிலத்தில் பழங்குடியினருக்கான தொகுதிகளை குறைக்க முயற்சி நடந்தபோது, கடுமையான போராட்டங்கள் நடந்தன.

ஏன் பழங்குடியினருக்கான தொகுதிகள் குறைக்கப்பட வேண்டும்? சென்னையில் நடந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பற்றி ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us