sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு

/

ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு

ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு

ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு

23


UPDATED : ஜூலை 12, 2024 05:05 PM

ADDED : ஜூலை 12, 2024 05:04 PM

Google News

UPDATED : ஜூலை 12, 2024 05:05 PM ADDED : ஜூலை 12, 2024 05:04 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக (சம்விதான் ஹத்ய திவாஸ் )கடைப்பிடிக்கப்படும் எனவும், நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டுதோறும் இதே தினத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: 1975 ம் ஆண்டு ஜூன் 25 ல் அப்போதைய பிரதமர் இந்திரா, சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாக நாட்டின் மீது எமர்ஜென்சியை திணித்து நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாத நமது லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்கள் குரல் ஒடுக்கப்பட்டது.

Image 1292835ஜூன் 25 ம் தேதியை அரசியல்சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில் எமர்ஜென்சியின் போது மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த மக்களின் பங்களிப்புகள் நினைவு கூரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அமித்ஷா கூறியுள்ளார். மேலும், அதற்கான அரசாணையையும் அமித்ஷா வெளியிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us