sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கைலாஷ் -மானசரோவர் யாத்திரை மீண்டும் துவக்கம்: இந்தியா, சீனா ஒப்புதல்

/

கைலாஷ் -மானசரோவர் யாத்திரை மீண்டும் துவக்கம்: இந்தியா, சீனா ஒப்புதல்

கைலாஷ் -மானசரோவர் யாத்திரை மீண்டும் துவக்கம்: இந்தியா, சீனா ஒப்புதல்

கைலாஷ் -மானசரோவர் யாத்திரை மீண்டும் துவக்கம்: இந்தியா, சீனா ஒப்புதல்

4


ADDED : ஜன 27, 2025 10:24 PM

Google News

ADDED : ஜன 27, 2025 10:24 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கைலாஷ்- மானசரோவர் யாத்திரை மற்றும் நேரடி விமான சேவை இவை இரண்டையும் மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது டில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025ம் ஆண்டில் கைலாஷ் மானசரோவர் யாத்திரையையும் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்களையும் மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வெளியுறவுச் செயலாளர்-துணை அமைச்சர் முறை கூட்டத்திற்காக விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்தார்.

அப்போது,வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையேயான சந்திப்பின் போது, இந்தியா- சீனா இருதரப்பு உறவுகளை மேலும் சரிசெய்யும் நோக்கில், 2020 முதல் நிறுத்தப்பட்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

புது டில்லி- பெய்ஜிங் இடையே நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவாக இந்த 2025ம் ஆண்டு அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் ஒருவருக்கொருவர் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் மீட்டெடுக்கவும் பொது ராஜதந்திர முயற்சிகளை இரட்டிப்பாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us