sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்றதால் கார்கே கோபம்! சிவகுமாருக்கு கண்டிப்பு

/

ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்றதால் கார்கே கோபம்! சிவகுமாருக்கு கண்டிப்பு

ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்றதால் கார்கே கோபம்! சிவகுமாருக்கு கண்டிப்பு

ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்றதால் கார்கே கோபம்! சிவகுமாருக்கு கண்டிப்பு


ADDED : ஜன 27, 2024 12:43 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு திரும்பிச் சென்றதால், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மீது, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோபம் அடைந்துள்ளார். மாற்றுக்கட்சியில் இருந்து வருபவரின் பின்னணி என்ன, நம் கட்சிக்கு அவர் ஒத்துவருவாரா என்பதை பார்த்து, கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

கர்நாடக பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜெகதீஷ் ஷெட்டர். ஹுப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதியில் இருந்து, ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, அவருக்கு பா.ஜ., மேலிடம், 'சீட்' மறுத்தது.

இதனால் காங்கிரசில் இணைந்து, அதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். ஆனாலும் அவரை காங்கிரஸ் நியமன எம்.எல்.சி., ஆக்கியது.

ஆனால் நேற்று முன்தினம் திடீரென காங்கிரசில் இருந்து விலகி, ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். இது கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவசரம் வேண்டாம்


குறிப்பாக, பா.ஜ.,வில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டரை, காங்கிரசுக்கு அழைத்து வந்து, அவருக்கு 'சீட்' கொடுத்த, துணை முதல்வர் சிவகுமார் அதிர்ச்சியில் உறைந்தார். தன்னை காங்கிரஸ் மரியாதையுடன் நடத்தியது என்றே ஜெகதீஷ் ஷெட்டர் கூறி வந்தார். ஆனால் அவர் ஏன் பா.ஜ.,வுக்குச் சென்றார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில், குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்றார். இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கேயும், சிவகுமாரும் தனியாக ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:


பா.ஜ.,வுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் சென்றது குறித்து, சிவகுமார் மீது கார்கே கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சங் பரிவார் பின்னணியில் இருந்து வந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். அவரை அவசரப்பட்டு கட்சியில் சேர்த்தது ஏன்? அவர் நம் கட்சிக்கு ஒத்து வருவாரா என்பதை பார்த்து சேர்த்து இருக்க வேண்டும்.

இனி மாற்றுக்கட்சிகளில் இருந்து வருவோரை, அவசரப்பட்டு கட்சியில் சேர்க்காமல், அவரது பின்னணி என்ன? அவரது பலம் என்ன? நம் கட்சியுடன் ஒத்து வருவாரா? கட்சியுடன் கடைசி வரை பயணம் செய்வாரா என்பதை தீவிரமாக பரீசிலித்து கட்சியில் சேர்க்க வேண்டும் என, கார்கே கண்டிப்புடன் கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவகுமார் புலம்பல்


ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறினார். நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.,வில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி, மனவருத்தத்தில் இருந்தார். அவரை கட்சிக்கு அழைத்து வந்து, தேர்தலில் போட்டியிட 'சீட்' கொடுத்தேன். சொந்த தொகுதியில் தோற்றார். ஆனாலும் அவரை எம்.எல்.சி., ஆக்கினோம்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஹுப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு, 'சீட்' கொடுக்க நினைத்து இருந்தோம். ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்ததால், அவருக்காக எங்கள் கட்சி வேட்பாளர், தியாகம் செய்தார்.பா.ஜ., மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லி தான், எங்கள் கட்சிக்கு வந்தார். இப்போது எதற்கு பா.ஜ.,வுக்கு சென்றார் என்பதை, அவரே தெளிவுப்படுத்த வேண்டும்.
'ஆப்பரேஷன் தாமரை' செய்து, முதல்வர் பதவியில் இருந்து இறங்கியவர்களுடன், குமாரசாமி கூட்டணி வைத்துள்ளார். அவர் பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டாரா? அரசியலில் எல்லாமே நடக்கும்.
பா.ஜ.,வினர் எங்கள் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, முயற்சி செய்வர். நாங்கள் 1 அடி எடுத்து வைத்தால், அவர்களில் எத்தனை பேர் காலி ஆகுவர் என்று தெரியாது. கட்சி மேலிடத்தை விமர்சித்து பேசிய, அமைச்சர் ராஜண்ணாவிடம், மேலிட தலைவர்களே விளக்கம் கேட்பர்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us