sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'முடா' வழக்கில் சித்தராமையாவுக்கு சிக்கல்! 'குற்றமற்றவர்' அறிக்கையை ஏற்காத சிறப்பு நீதிமன்றம்

/

'முடா' வழக்கில் சித்தராமையாவுக்கு சிக்கல்! 'குற்றமற்றவர்' அறிக்கையை ஏற்காத சிறப்பு நீதிமன்றம்

'முடா' வழக்கில் சித்தராமையாவுக்கு சிக்கல்! 'குற்றமற்றவர்' அறிக்கையை ஏற்காத சிறப்பு நீதிமன்றம்

'முடா' வழக்கில் சித்தராமையாவுக்கு சிக்கல்! 'குற்றமற்றவர்' அறிக்கையை ஏற்காத சிறப்பு நீதிமன்றம்

4


ADDED : ஏப் 16, 2025 04:06 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 04:06 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'முடா' வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'குற்றமற்றவர்' என்று லோக் ஆயுக்தா போலீசார் சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிராக, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்த லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளதால், சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக, தன் மனைவி பார்வதிக்கு முறைகேடாக, 14 வீட்டு மனைகள் பெற்றதாக, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மனைவியின் சகோதரர் மல்லிகார்ஜுனசாமி, தேவராஜ் ஆகியோர் மீது லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத் துறையிடம், சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர் புகார் அளித்திருந்தார்.

முறைகேடு


கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்ததால், சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், 'சித்தராமையா உட்பட நால்வரும் குற்றமற்றவர்கள்' என்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கையை எதிர்த்து, இதே நீதிமன்றத்தில் ஸ்நேகமயி கிருஷ்ணா மற்றும் அமலாக்கத் துறையினரும் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை, நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் முன் நடந்தது.

ஸ்நேகமயி கிருஷ்ணா தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'இவ்வழக்கில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. அது தொடர்பான ஆவணங்களை, விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து உள்ளோம். ஆனாலும், குற்றமற்றவர் என்ற அறிக்கையை சமர்ப்பித்து உள்ளனர். அந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

அமலாக்கத் துறை வக்கீல் வாதிடுகையில், 'முடா வழக்கு தொடர்பான விசாரணையில், சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதை லோக் ஆயுக்தா போலீசாரிடம் எங்கள் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், குற்றமற்றவர்கள் என்ற அறிக்கையை லோக் ஆயுக்தா போலீசார் சமர்ப்பித்து உள்ளனர்' என்றார்.

கேள்வி


நீதிபதி சந்தோஷ், ''லோக் ஆயுக்தா போலீஸ் சமர்ப்பித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், உங்களின் நிலைப்பாடு என்ன?'' என, அமலாக்கத் துறை வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். அமலாக்கத் துறை வக்கீல், 'அதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' என்றார்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை ஏப்., 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.

இறுதி அறிக்கை


இந்நிலையில், நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் நேற்று அளித்த தீர்ப்பில், ''இவ்வழக்கு விசாரணையில் லோக் ஆயுக்தா போலீசார் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ''அதன் பின்னரே, 'குற்றமற்றவர்' அறிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இந்த அறிக்கைக்கு எதிராக, அமலாக்கத் துறையும் வழக்கு தொடரலாம்.

''முடா வழக்கு தொடர்பாக, லோக் ஆயுக்தா மீண்டும் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை, மே 7ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.

லோக் ஆயுக்தா சமர்ப்பித்த அறிக்கையை, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று எண்ணியிருந்த முதல்வர் சித்தராமையாவுக்கு, சிறப்பு நீதிமன்றம், 'ஷாக்' கொடுத்து உள்ளது. அத்துடன் அமலாக்கத் துறைக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளதால், சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us