sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யு.பி.ஐ.,யை நிராகரித்தாலும் ஜி.எஸ்.டி., கட்டாயம் கர்நாடக வணிக வரித்துறை அதிரடி

/

யு.பி.ஐ.,யை நிராகரித்தாலும் ஜி.எஸ்.டி., கட்டாயம் கர்நாடக வணிக வரித்துறை அதிரடி

யு.பி.ஐ.,யை நிராகரித்தாலும் ஜி.எஸ்.டி., கட்டாயம் கர்நாடக வணிக வரித்துறை அதிரடி

யு.பி.ஐ.,யை நிராகரித்தாலும் ஜி.எஸ்.டி., கட்டாயம் கர்நாடக வணிக வரித்துறை அதிரடி


ADDED : ஜூலை 19, 2025 06:15 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'ஆன்லைன்' பரிவர்த்தனைகளை கணக்கிட்டு ஜி.எஸ்.டி., நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், தங்கள் கடைகளில் உள்ள, 'கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்'களை வணிகர்கள் அகற்றி வருகின்றனர்.

ஆனால், 'கூகுள் பே, போன் பே' உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளை பயன்படுத்தாவிட்டாலும், ஆண்டு வருமானம் 40 லட்சம் ரூபாயை தாண்டினால் ஜி.எஸ்.டி.,யை வணிகர்கள் கட்டாயம் செலுத்த வேண்டும்' என வணிக வரித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள பேக்கரி, காய்கறி, பால், சிகரெட், குட்கா கடை வைத்திருப்பவர்களில் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை; 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வியாபாரம் செய்யும் அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், சலுான் உள்ளிட்டவை நடத்துவோரும் ஜி.எஸ்.டி., செலுத்தும்படி, 14,000 வியாபாரிகளுக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இவர்களில் பெரும்பாலானோருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வரி விதிக்கப்பட்டது. இதை பார்த்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோபம்


போன் பே, கூகுள் பே உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளின் வாயிலாக பெறப்பட்ட தொகையை அடிப்படையாக வைத்தும், 2021 முதல் 2024 வரை நடந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை கணக்கிட்டும் வரி விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த வியாபாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மீது கோபம் அடைந்தனர். நகரில் உள்ள பல வியாபாரிகள், தங்கள் கடைகளில் உள்ள கியூ.ஆர்., கோர்டு ஸ்கேனர்களை அகற்றியுள்ளனர். அத்துடன் 'கூகுள் பே, போன் பே கிடையாது; பணம் மட்டுமே பெறப்படும்' என அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். இதனால், 'தங்கள் வியாபாரம் குறைந்தாலும், அதிக வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும்' என, கருதுகின்றனர்.

கடையடைப்பு


இந்த வரி விதிப்பை கண்டித்து, வரும் 23, 24 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுதும் பால், பேக்கரி, சிகரெட், மளிகை கடைகள் மூடப்படும் எனவும், 25ம் தேதி கடைகளை மூடிவிட்டு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கர்நாடக மாநில தொழிலாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது. இவர்களின் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில், வணிக வரித்துறை வெளியிட்ட அறிக்கை:

ஜி.எஸ்.டி., நோட்டீஸ் வழங்கப்பட்ட பின், பல கடைகளில் கியூ.ஆர்., கோர்டு ஸ்கேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. வணிகர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்தாலும், செய்யாவிட்டாலும், அவர்கள் 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டினால் கட்டாயம் ஜி.எஸ்.டி., செலுத்தியாக வேண்டும். கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்களை அகற்றுவதால் எந்த பலனுமில்லை.

கட்டாயம்


நோட்டீஸ் பெற்றவர்கள், வணிக வரித்துறை அலுவலகத்துக்கு ஆவணங்களுடன் சென்று அதிகாரிகளை சந்திக்க வேண்டும். அவர்கள், வியாபாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள், தீர்வுகளை வழங்குவர்.

அவர்களின் ஆலோசனைப்படி வரியை செலுத்த வேண்டும். நோட்டீஸ் பெற்றவர்கள் கட்டாயம் ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும்.

ஆண்டு வருமானம், 1.50 கோடி ரூபாய்க்கு குறைவாக உள்ள வியாபாரிகள், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, சமரச வரி முறையை தேர்வு செய்து வரி செலுத்தலாம். இதன் மூலம், மாநில அரசுக்கு 0.50 சதவீதமும் மத்திய அரசுக்கு 0.50 சதவீதமும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். இந்த முறையில் வரி சலுகைகள் கிடைக்கும்.

இதுவரை, மாநிலத்தில் 98,915 வணிகர்கள் பதிவு செய்து, சமரச வரியின் கீழ் வரி செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us