sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடைபாதை ஆக்கிரமிப்பு கர்நாடக ஐகோர்ட் அதிருப்தி

/

நடைபாதை ஆக்கிரமிப்பு கர்நாடக ஐகோர்ட் அதிருப்தி

நடைபாதை ஆக்கிரமிப்பு கர்நாடக ஐகோர்ட் அதிருப்தி

நடைபாதை ஆக்கிரமிப்பு கர்நாடக ஐகோர்ட் அதிருப்தி


ADDED : ஜன 31, 2024 05:39 AM

Google News

ADDED : ஜன 31, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காண்பித்த பெங்களூரு மாநகராட்சி மீது, கர்நாடக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

பெங்களூரில் பெரும்பாலான நடைபாதைகளை, தனியார் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். நடைபாதைகளில் கடைகள் உள்ளன.

பொருட்களை பரப்பி வைத்துள்ளதால், பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.

நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதில், மாநகராட்சி ஆர்வம் காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விஷயத்தை தீவிரமாக கருதிய கர்நாடக உயர்நீதிமன்றம், தானாக முன் வந்து, பொதுநலன் மனுவாக பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. நேற்று மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகராட்சியின் அலட்சியத்துக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

அனைத்து நடைபாதைகளிலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பிப்ரவரி 1ல், மாநகராட்சி தலைமை கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us