கரூர் நெரிசல் வழக்கு; விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்
கரூர் நெரிசல் வழக்கு; விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்
ADDED : மார் 09, 2026 12:52 PM

நமது டில்லி நிருபர்
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) டில்லியில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் , கடந்த செப்டம்பர் 27ல் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
டில்லி சிபிஐ அலுவலகத்தில், இரண்டு முறை ஆஜராகி சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்து இருந்தார். இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
விஜய் தரப்பில் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதை சிபிஐ ஏற்குமா, ஏற்காவிட்டால் நாளை விஜய் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

