தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் பரிதாபம்!
தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் பரிதாபம்!
ADDED : டிச 18, 2024 09:52 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில், ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் தூங்கி கொண்டு இருந்தனர். இன்று (டிச.,18) அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர்கள் 4 பேரும் கரும்புகையை சுவாதித்ததால், மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.