sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பணத்தில் வழுக்கி விழுந்தார் கெஜ்ரிவால்; அன்னா ஹாசாரே குற்றச்சாட்டு

/

பணத்தில் வழுக்கி விழுந்தார் கெஜ்ரிவால்; அன்னா ஹாசாரே குற்றச்சாட்டு

பணத்தில் வழுக்கி விழுந்தார் கெஜ்ரிவால்; அன்னா ஹாசாரே குற்றச்சாட்டு

பணத்தில் வழுக்கி விழுந்தார் கெஜ்ரிவால்; அன்னா ஹாசாரே குற்றச்சாட்டு

19


UPDATED : ஜன 30, 2025 03:37 PM

ADDED : ஜன 30, 2025 03:36 PM

Google News

UPDATED : ஜன 30, 2025 03:37 PM ADDED : ஜன 30, 2025 03:36 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பணத்தில் வழுக்கி விழுந்தார் கெஜ்ரிவால். அவர் பணத்திற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார்' என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றச்சாட்டி உள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. கடந்த 2011ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பினார். அவர் லோக்பால் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த இயக்கத்தில் இணைந்து தான், தன் அரசியல் பயணத்தை கெஜ்ரிவால் துவக்கினார்.

பின்னர், அன்னா ஹசாரே அணியில் இருந்து விலகிய அவர், ஆம்ஆத்மி என்ற கட்சியை தனியாக ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு டில்லி முதல்வர் ஆனார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வரும் பிப்ரவரி 5ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அவர் களம் இறங்குகிறார். இந்நிலையில், இன்று (ஜன.,30) கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு அன்னா ஹசாரே பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது. அவர் என்னுடன் தன்னார்வலராக பணிபுரிந்து உள்ளார். அப்போது அவருக்கு, நான் வாழ்க்கையில் எண்ணம் மற்றும் செயல் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறுவேன்.

பள்ளி பருவத்தில் இருந்தே உண்மை பாதையில் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பணத்தில் வழுக்கி விழுந்து விட்டார் கெஜ்ரிவால். அவர் பணத்திற்குதான் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us