sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று நம்பிக்கை ஓட்டு கோருகிறார் கெஜ்ரிவால்

/

இன்று நம்பிக்கை ஓட்டு கோருகிறார் கெஜ்ரிவால்

இன்று நம்பிக்கை ஓட்டு கோருகிறார் கெஜ்ரிவால்

இன்று நம்பிக்கை ஓட்டு கோருகிறார் கெஜ்ரிவால்

3


ADDED : பிப் 17, 2024 02:15 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:15 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, பிப். 17-

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

இங்கு, மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டது. இவற்றை அவர் நிராகரித்தார்.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவால் மறுப்பதாகக் கூறி, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம், 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் சட்ட சபையில் முதல்வர் கெஜ்ரிவால் நேற்று கூறுகையில், ''டில்லியில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது பா.ஜ.,வுக்கு தெரியும். அதனால் தான், ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பல்வேறு யுக்திகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

''எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கட்சி விலகவில்லை என்பதை காட்டுவதற்காக, நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தை முன்வைக்கிறேன்,'' என்றார். இதையடுத்து இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

மொத்தம், 70 எம்.எல்.ஏ.,க்கள் உடைய டில்லி சட்டசபையில், ஆளும் ஆம் ஆத்மிக்கு, 62; பா.ஜ.,வுக்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி பலத்தை நிரூபித்து விட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த முடியாது.






      Dinamalar
      Follow us