sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

/

கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

22


ADDED : மே 28, 2024 12:01 PM

Google News

ADDED : மே 28, 2024 12:01 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் கைவிரித்து விட்டது.

மதுபான முறைகேட்டு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார் . இது தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் செயல் என்றும், பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டு இடைக்கால ஜாமின் பெற்றார். தேர்தல் முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி, மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஜூன் 4 ம்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. ஜூன் 7 வரை ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். ' சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் 7 கிலோ எடை குறைந்து விட்டதாகவும், மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும், உடல் நலத்தை காரணம் காட்டி' ஜாமின் நீட்டிப்பு கேட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க முடியாது. தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என விசாரித்த நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.






      Dinamalar
      Follow us