sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம்பிக்கை ஓட்டெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி மத்திய அரசு மீது பாய்ச்சல்

/

நம்பிக்கை ஓட்டெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி மத்திய அரசு மீது பாய்ச்சல்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி மத்திய அரசு மீது பாய்ச்சல்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி மத்திய அரசு மீது பாய்ச்சல்


ADDED : பிப் 18, 2024 01:10 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,டில்லி சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.

டில்லியில், ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க, பா.ஜ., சதித் திட்டம் தீட்டி வருவதாக, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.

தங்கள் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., தலைவர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தால், 25 கோடி ரூபாய் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் மேலும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் இதை, எதிர்க்கட்சியான பா.ஜ., திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கிடையே, டில்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், டில்லி சட்டபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் தீர்மானத்தை, முதல்வர் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், ஆளும் ஆம் ஆத்மிக்கு 62; பா.ஜ.,வுக்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று, டில்லி சட்டசபையில் கெஜ்ரிவால் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது, ஆம் ஆத்மியின் 54 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே சட்டசபையில் இருந்தனர்.

உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால், சிலர் பங்கேற்கவில்லை. 54 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததை அடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றி பெற்றது.

முன்னதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபையில் பேசியதாவது:

பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய சவாலாக, ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ., எங்களை அழிக்கப் பார்க்கிறது. அதனால் தான், ஆம் ஆத்மி மீது அனைத்து மூலைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதையெல்லாம் கண்டு எங்களுக்கு பயமில்லை. வரும் லோக்சபா தேர்தலில், ஒருவேளை பா.ஜ., வெற்றி பெற்றாலும், 2029 தேர்தலில், அக்கட்சியிடம் இருந்து நாட்டை ஆம் ஆத்மி காப்பாற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விசாரணைக்கு ஆஜராவாரா?

மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத் துறையினர் அனுப்பிய ஐந்து சம்மன்களை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இதை எதிர்த்து, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான கெஜ்ரிவால், ''மார்ச் முதல் வாரம் வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிமன்றம், வழக்கை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதற்கிடையே, அமலாக்கத் துறை அனுப்பிய ஆறாவது சம்மனை ஏற்று, முதல்வர் கெஜ்ரிவால் நாளை விசாரணைக்கு ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us