sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பரிதாப பலி; கேரளாவில் அதிர்ச்சி!

/

கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பரிதாப பலி; கேரளாவில் அதிர்ச்சி!

கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பரிதாப பலி; கேரளாவில் அதிர்ச்சி!

கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பரிதாப பலி; கேரளாவில் அதிர்ச்சி!

13


ADDED : டிச 15, 2024 08:40 AM

Google News

ADDED : டிச 15, 2024 08:40 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்தனம்திட்டா: கேரளாவில் கார் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குடும்பத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் புதுமண தம்பதிகள் மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. புதுமண தம்பதிகள் பெயர் நிகில், அனு என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். நிகில் கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

டிரைவர் தூங்கியது விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பஸ்சில் பயணம் செய்த சிலர் மற்றும் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குவைத்தில் இருக்கும் நிகிலின் சகோதரி வீடு திரும்பியதும் நால்வரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us