sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல் மாநிலமாக தீவிர வறுமையை ஒழித்த கேரளா: முதல்வர் பெருமிதம்

/

முதல் மாநிலமாக தீவிர வறுமையை ஒழித்த கேரளா: முதல்வர் பெருமிதம்

முதல் மாநிலமாக தீவிர வறுமையை ஒழித்த கேரளா: முதல்வர் பெருமிதம்

முதல் மாநிலமாக தீவிர வறுமையை ஒழித்த கேரளா: முதல்வர் பெருமிதம்

3


ADDED : நவ 02, 2025 12:24 AM

Google News

ADDED : நவ 02, 2025 12:24 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் மாநிலமாக, தீவிர வறுமையை ஒழித்து கேரளா சாதனை படைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் நிறுவன தினத்தையொட்டி, சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

கேரளா உருவான தினமான இந்த நாள், வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளாவை மாற்றி நாம் சாதனை படைத்துள்ளோம். இந்த சட்டசபை பல வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகளை கண்டுள்ளது.

வளர்ச்சியடைந்த கேரளாவை உருவாக்குவதில் மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளோம். 2021ல், புதிய அமைச்சரவை பதவியேற்ற பின் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று, தீவிர வறுமை ஒழிப்பு. தற்போது அந்த இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

வறுமையை கேரளா ஒழித்தது எப்படி? நாட்டில், 100 சதவீத கல்வியறிவு, டிஜிட்டல் கல்வியறிவு, முழுமையாக மின்சாரம் என பல பெருமைகளை கொண்ட கேரளா, தீவிர வறுமையில் இருந்து மக்களை மீட்க பல சிறப்பான திட்டங்களை மேற்கொண்டது. 1,000 கோடி ரூபாய் மதிப்பில், அதிதீவிர வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. * 20,648 குடும்பங்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது; இதில், 2,210 குடும்பங்களுக்கு சூடான உணவு வழங்கப்பட்டது * 85,721 பேருக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன * ஆயிரக்கணக்கானோருக்கு வீடுகள் கட்டி தரப்பட்டன; 5,400-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டன * 2,713 நிலமற்ற குடும்பங்களுக்கு வீடு கட்ட நிலம் வழங்கப்பட்டது * 21,263 பேர் முதன்முறையாக ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் ஓய்வூதியம் போன்ற அத்தியாவசிய ஆவணங்களை பெற்றனர் * தீவிர வறுமையை ஒழிக்க ஒரே மாதிரியான கொள்கைக்கு பதில், 64,006 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொருவரின் தனித்துவமான தேவைகளுக்கும் குறிப்பிட்ட நுண் திட்டங்களை கேரள அரசு உருவாக்கியது.








      Dinamalar
      Follow us