sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது:சத்தீஸ்கர் பா.ஜ., அரசுக்கு கேரள பா.ஜ., கண்டனம்

/

மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது:சத்தீஸ்கர் பா.ஜ., அரசுக்கு கேரள பா.ஜ., கண்டனம்

மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது:சத்தீஸ்கர் பா.ஜ., அரசுக்கு கேரள பா.ஜ., கண்டனம்

மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது:சத்தீஸ்கர் பா.ஜ., அரசுக்கு கேரள பா.ஜ., கண்டனம்

1


ADDED : ஜூலை 30, 2025 09:53 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 09:53 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: சத்தீஸ்கரில் மூன்று பெண்களை மதம் மாற்றியதாக கூறி, இரு கேரள கன்னியாஸ்திரிகளை கைது செய்ததற்கு, கேரள மாநில பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில், துர்க் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த கேரளாவின் ப்ரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் என்ற இரு கன்னியாஸ்திரிகள் கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

நாராயண்பூரை சேர்ந்த மூன்று பெண்களை அவர்கள் மதமாற்றம் செய்ய முயன்றதாக பஜ்ரங் தள அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்குவதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து, சத்தீஸ்கர் அரசிடம் பேச்சு நடத்தி, இரு கன்னியாஸ்திரிகளையும் விடுவிக்கும் முயற்சிகளில் பா.ஜ.,வும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் களமிறங்கியுள்ளது.

இதற்காக இரு கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் சத்தீஸ்கரில் முகாமிட்டுள்ளனர். இதில் அனுப் அந்தோணி தலைமையிலான பா.ஜ., பிரதிநிதிகள் குழு, சத்தீஸ்கரின் துணை முதல்வர் விஜய் சர்மாவை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று பேசியது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இக்குழு, 'நீதி தவறாத வகையில், இந்த விவகாரத்தை அணுகுவதாக சத்தீஸ்கர் அரசு உறுதியளித்திருக்கிறது. எனவே விரைவில் அரசு தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காணும்,'' என தெரிவித்தனர்.

இதற்கிடையே காங்., எம்.பி., பென்னி, ஆர்.எஸ்.பி., எம்.பி., பிரேமசந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணி பிரதிநிதிகள் குழு, துர்க் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரிகளை சந்தித்தது.

காங்.,தான் காரணம்!

சத்தீஸ்கரில் நிச்சயம் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமே. இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர், எதற்காக இப்படி செய்தனர் என்பது விரிவான விசாரணைக்கு பின் தெரிந்து விடும். இரு கன்னியாஸ்திரிகளையும் பத்திரமாக மீண்டும் கேரளாவுக்கு அழைத்து வரவேண்டும். அது தான் எங்கள் நோக்கம். ரயில்வே ஸ்டேஷனில் இரு கன்னியாஸ்திரிகளிடமும் அநாகரீகமாக நடந்து கொண்ட பஜ்ரங் தள தொண்டர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. சட்டத்திற்கு விரோதமாக பஜ்ரங் தள அமைப்பினர் செயல்பட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இந்த பிரச்னைக்கு காரணமே காங்கிரஸ் தான். அவர்கள் ஆட்சியின்போது தான் சத்தீஸ்கரில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- ராஜிவ் சந்திரசேகர்
கேரள பா.ஜ., தலைவர்








      Dinamalar
      Follow us