sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளா சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

/

கேரளா சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

கேரளா சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

கேரளா சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

14


ADDED : ஜன 12, 2025 09:57 AM

Google News

ADDED : ஜன 12, 2025 09:57 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கேரளாவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 18 வயது தடகள வீராங்கனை புகார் அளித்த சம்பவம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயதாகும் தடகள வீராங்கனை, குழந்தைகள் நலத்துறையில் சமீபத்தில் புகார் அளித்தார். அதில், தன் 13வது வயதில், ஆபாச வீடியோக்களை காட்டி, பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் நலத்துறை பரிந்துரையின்படி, இது குறித்து 'போக்சோ' சட்டத்தின் கீழ், பத்தனம்திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஐந்து ஆண்டுகளில், சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர், அவரது நண்பர்கள் மற்றும் சிறுமியின் பயிற்சியாளர் உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக இதுவரை, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தடகள வீராங்கனை, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 18 வயது தடகள வீராங்கனை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், 5 ஆண்டுகளாக சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.






      Dinamalar
      Follow us