sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரெண்டே நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்: கேரள சட்டசபையில் பரபரப்பு

/

ரெண்டே நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்: கேரள சட்டசபையில் பரபரப்பு

ரெண்டே நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்: கேரள சட்டசபையில் பரபரப்பு

ரெண்டே நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்: கேரள சட்டசபையில் பரபரப்பு


UPDATED : ஜன 25, 2024 01:17 PM

ADDED : ஜன 25, 2024 12:13 PM

Google News

UPDATED : ஜன 25, 2024 01:17 PM ADDED : ஜன 25, 2024 12:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத் தொடரில் இரண்டே நிமிடத்தில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள அரசுக்கும் கேரள கவர்னராக உள்ள ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கேரள மாநில அரசை பொதுவெளியில் ஆரிப் முகமது கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி கவர்னருக்கு எதிராக கேரளா அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கிடையே இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,25) துவங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்குவது வழக்கம். அதன்படி இன்று காலை கவர்னர் ஆரிப் முகமது கான், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை துவங்கினார். 62 பக்கம் கொண்ட கொள்கை உரையின் 136 பத்திகளில், நேரடியாக கடைசி பக்கத்தை திருப்பிய கவர்னர், ''இப்போது கடைசி பத்தியை படிக்கிறேன்'' எனக் கூறி அதை மட்டும் வாசித்துவிட்டு உரையை முடித்து அமர்ந்தார்.Image 1223525அதன்பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது; அது முடிந்ததும், கவர்னர் சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்த முழு காட்சிகளும் 5 நிமிடங்களுக்குள் நடந்தது. அதிலும் சரியாக 9:02 மணிக்கு உரையை துவக்கிய கவர்னர் ஆரிப் முகமது கான், 9:04க்கு உரையை முடித்தார். வெறும் இரண்டே நிமிடத்தில் கவர்னர் உரையை முடித்ததால் சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.






      Dinamalar
      Follow us