sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டக்கல்லுாரி மாணவிக்கு தொந்தரவு கேரள உயர்நீதிமன்ற ஊழியர் கைது

/

சட்டக்கல்லுாரி மாணவிக்கு தொந்தரவு கேரள உயர்நீதிமன்ற ஊழியர் கைது

சட்டக்கல்லுாரி மாணவிக்கு தொந்தரவு கேரள உயர்நீதிமன்ற ஊழியர் கைது

சட்டக்கல்லுாரி மாணவிக்கு தொந்தரவு கேரள உயர்நீதிமன்ற ஊழியர் கைது


ADDED : ஜூலை 26, 2025 11:07 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்,:ஓடும் ரயிலில் சட்டக் கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கேரள உயர்நீதிமன்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயதான ஒரு மாணவி திருச்சூர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். வார இறுதியில் ஊருக்கு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இவர் வேணாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 9:00 மணியளவில் வர்கலாவை தாண்டி ரயில் வந்த போது மாணவியின் அருகில் இருந்தவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவி உடனடியாக ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் திருவனந்தபுரம் வட்டியூர் காவு பகுதியைச் சேர்ந்த சதீஷ் 41, என்பதும், கேரள உயர்நீதிமன்றத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது.

அவர் மீது தம்பானூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us