sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

/

போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

9


ADDED : மார் 01, 2025 07:50 PM

Google News

ADDED : மார் 01, 2025 07:50 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொச்சி: பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அப்பாவி ஆண்களை சிக்க வைக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கும் போது நீதிபதி பி.வி. குஞ்சிகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில், சரியாக வேலை செய்யாததற்காக, நிறுவனத்தின் மேலாளர், புகார்தாரான அந்த பெண்ணை வேலையில் இருந்து நீக்கிய பின்னர், அந்த பெண்ணை வாய்மொழியாக திட்டியதாகவும், மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் அளித்த புகாரை போலீஸ் சரியாக விசாரிக்க வில்லை.

இன்றைய காலகட்டத்தில் அப்பாவி மக்கள் மீது கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு உள்ளது. புகார்தாரர் ஒரு பெண் என்பதால், அவரது கூறுவது முற்றிலும் உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது.

​புகார்தாரர் ஒரு ஆண் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக காவல்துறை கண்டறிந்தால், அந்தப் பெண் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த வழக்கில், தான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாலியல் நோக்கத்துடன் தனது கைகளைப் பிடித்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர், அந்தப் பெண்ணின் வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து போலீசில் புகார் அளித்தார், மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, அவர் பேசியவற்றின் ஆடியோ பதிவு அடங்கிய பென் டிரைவையும் கொடுத்தார்.

தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு ஏற்படும் சேதத்தை பணம் செலுத்துவதன் மூலம் மட்டும் ஈடுசெய்ய முடியாது. அவரது நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் போன்றவற்றை ஒரே ஒரு பொய் புகாரால் நாசம் செய்ய முடியும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு காவல்துறை இருமுறை யோசிக்க வேண்டும்

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரின் தரப்புகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us