sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கவர்னர் மாளிகை விழாவில் கேரள அமைச்சர் வெளிநடப்பு

/

கவர்னர் மாளிகை விழாவில் கேரள அமைச்சர் வெளிநடப்பு

கவர்னர் மாளிகை விழாவில் கேரள அமைச்சர் வெளிநடப்பு

கவர்னர் மாளிகை விழாவில் கேரள அமைச்சர் வெளிநடப்பு


ADDED : ஜூன் 20, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம் : கேரளாவில், கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், கையில் காவிக்கொடியுடன் பாரத மாதா படம் மீண்டும் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் பங்கேற்காமல் அமைச்சர் சிவன்குட்டி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு கவர்னராக இருந்த ஆரிப் முஹமது கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் ஏற்பட்டது. முடிவில், கவர்னர் ஆரிப் முஹமது கான் மாற்றப்பட்டார்.

புதிய கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டார். இந்தாண்டு துவக்கத்தில் கவர்னராக பொறுப்பேற்றது முதல், மாநில அரசுடன் இணக்கமான சூழலையே அவர் கடைப்பிடித்து வருகிறார்.

இந்த சூழலில், கடந்த 4ம் தேதி கேரள கவர்னர் மாளிகையில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டிருந்தது. இது மாநில அரசில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த வேளாண் அமைச்சர் பிரசாத்தை கோபமடைய செய்தது.

'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பயன்படுத்தும் இந்தப் படம், அரசு விழாவில் இடம் பெறலாமா?' என கேள்வி எழுப்பிய அவர், நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

இரு வாரங்களுக்கு மேலாக இந்த பிரச்னை அனலை கிளப்பி வரும் நிலையில், சமீபத்தில் இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி மவுனம் கலைத்தார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாரத மாதா படம் அரசு நிகழ்ச்சியில் பயன்படுத்தக் கூடாது என அவர் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சூழலில், திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், சாரண - சாரணியருக்கான சான்றிதழ் அளிக்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கான மேடையில், காவிக்கொடியை ஏந்திய பாரத மாதா படம் மீண்டும் வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்த மாநில அமைச்சர் சிவன்குட்டியை இது கோபம் அடையச் செய்தது. உடனே அங்கிருந்து அவர் வெளியேறினார்.

இதுகுறித்து அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், “பாரத மாதா புகைப்பட விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை முதல்வர் பினராயி விஜயனே கூறிவிட்டார்.

“மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்வது ஆணவத்தின் உச்சம். மஹாத்மா காந்தி அல்லது பிரதமரின் படம் இடம்பெற்றிருந்தால்கூட பரவாயில்லை.

''அது மதிப்புமிக்கதாக இருந்திருக்கும். அரசியல் மையமாக கவர்னர் மாளிகை மாறி வருவது வேதனை அளிக்கிறது. கவர்னர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ்., கூடாரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.

''முன்பு இதுபோல் நடந்தபோதே முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். வலுவாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தால், மீண்டும் நடந்திருக்காது,'' என, காங்., எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கவர்னருக்கு நேர்ந்த அவமானம்

அமைச்சர் வெளிநடப்பு குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தின் அரசியலமைப்பு தலைவராக உள்ள கவர்னர், அங்குள்ள அமைச்சர்களுக்கு பதவியேற்பும், சத்திய பிரமாணமும் செய்து வைக்கிறார். ஆகையால், அமைச்சர்களின் மரியாதைக்குரியவர் கவர்னர். அவரது விழாவில் இருந்து அமைச்சர் வெளியேறியது கவர்னரை அவமதிக்கும் செயல். ஒரு நிகழ்ச்சியில் இருந்து கவர்னர் வெளியேறிய பின் தான், அனைவரும் வெளியேறுவது வழக்கம்.அதை அமைச்சர் சிவன்குட்டி மீறியுள்ளார். கல்வித்துறையை கையாளும் அமைச்சர், தன் தவறான செய்கை காரணமாக, அங்கிருந்த மாணவர்களுக்கு ஓர் தவறான முன்னுதாரணத்தை எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us