sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?

/

ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?

ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?

ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?

16


ADDED : ஜூலை 16, 2025 07:02 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 07:02 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கேரளாவின் பாலக்காட்டில் உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 38. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அங்கு ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நிமிஷாவுக்கு, ஏமனில் இன்று நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையை, அந்நாட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவருக்கு இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஒர் சிறப்பு அலசல்!

நிமிஷா பிரியாவின் 17 வருட ஏமன் வாழ்க்கை விபரம் பின்வருமாறு:

2008ம் ஆண்டு: 20 வயது நிரம்பிய நிமிஷா பிரியா, நர்சாக வேலை செய்வதற்காக, ஏமனிற்கு குடிபெயர்ந்தார்.

2011ம் ஆண்டு: ஏமனில் நடந்த உள்நாட்டு மோதல் நிமிஷா பிரியாவிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. அவர் ஒரு மலையாளியைத் திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவரது கணவரும் மகளும் பின்னர் நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவுக்குத் திரும்பினர்.

2015ம் ஆண்டு: உள்நாட்டுப் போரால் நிலையை மாறியது.

2014ம் ஆண்டின் இறுதியில், ஹவுத்தி கிளர்ச்சிக் குழு தலைநகரை கைப்பற்றியது. 2015ம் ஆண்டு அவர்கள் அரசாங்கத்தையும் கைப்பற்றினர்.

2015ம் ஆண்டு தான் நிமிஷா பிரியா, உள்ளூர் விதிகளின்படி, உள்ளூர் தொழிலதிபர் தலால் அப்தோ மெஹ்தியுடன் இணைந்து, சனாவில் ஒரு மருத்துவமனையைத் திறந்தார். (தொழில் தொடங்க வேண்டும் எனில், அந்நாட்டை சேர்ந்த ஒருவர் பங்குதாரராக இருக்க வேண்டும்)

2016ம் ஆண்டு: வணிக கூட்டாளியாக இருந்த மெஹ்தி, அவரை அச்சுறுத்தி பணிய வைக்க முயற்சித்தார். இந்நிலையில், தன் ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூட்டாளி மீது நிமிஷா பிரியா புகார் அளித்தார். ஆனால் அவருக்கு போலீஸ் உதவி கிடைக்கவில்லை.

2017ம் ஆண்டு: மயக்க மருந்து தவறாகிவிட்டது. மெஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்க பிரியா முயன்றார், ஆனால் அவர் 'டோஸ்' அதிகமானதால் மெஹ்தி இறந்துவிட்டார்.

2018ம் ஆண்டு: விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் நிமிதாவுக்கு மரண தண்டனை விதித்தது.

உள்ளூர் விசாரணை நீதிமன்றத்தால் அவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு போதுமான சட்ட உதவி கிடைக்கவில்லை.

2020ம் ஆண்டு: நிமிஷா பிரியாவை காப்பாற்ற குழு உருவாக்கப்பட்டது.

அவரது மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதே நேரத்தில், சில குடிமக்களும் மலையாள இந்திய புலம்பெயர்ந்தோரும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்க ' சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில் ' ஒன்றை உருவாக்கினர்.

2023ம் ஆண்டு: நீதிமன்றம் முக்கிய முடிவு

மரண தண்டனைக்கு எதிரான நிமிஷா பிரியாவின் இறுதி மேல்முறையீட்டை ஏமனின் உச்ச நீதித்துறை கவுன்சில் தள்ளுபடி செய்தது.

2024ம் ஆண்டு: நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தினர். ஆனால் முடிவு ஏற்படவில்லை.

2025ம் ஆண்டு (ஜூலை 16ம் தேதி நிலவரப்படி): அவரது மரணதண்டனை முதலில் ஜூலை 16ம் தேதி திட்டமிடப்பட்டது, ஆனால் ராஜதந்திர மற்றும் மத தலையீடுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us