sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் தரணும்; குழந்தையின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்த கேரளா

/

அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் தரணும்; குழந்தையின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்த கேரளா

அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் தரணும்; குழந்தையின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்த கேரளா

அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் தரணும்; குழந்தையின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்த கேரளா

18


ADDED : பிப் 04, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:30 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கேரளாவில் அங்கன்வாடி படிக்கும் ஒரு குழந்தை உப்புமாவுக்கு பதிலாக பொரித்த கோழி, பிரியாணி தாங்க என கோரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. வைரலாகும் வீடியோவில், தொப்பி அணிந்திருந்த குழந்தை, 'எனக்கு அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வேண்டும் என்று அப்பாவி போல் தனது தாயிடம் கேட்கிறான். இந்த வீடியோவை குழந்தையின் தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இந்த வீடியோவை மேற்கோள் காட்டி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை விடுத்துள்ளான். அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நெட்டிசன்களும் குழந்தையின் கோரிக்கையை ஆதரித்தனர். சிலர் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உணவைக் குறைத்து, அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளுக்கு சிறந்த உணவை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.






      Dinamalar
      Follow us