sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஜூர் கர்ணா.. மிரட்டும் யானை

/

காஜூர் கர்ணா.. மிரட்டும் யானை

காஜூர் கர்ணா.. மிரட்டும் யானை

காஜூர் கர்ணா.. மிரட்டும் யானை


ADDED : பிப் 03, 2025 04:53 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரில் இருந்து ஊட்டி, சுல்தான்பத்தேரி, வயநாடு, கண்ணுார் செல்லும் பிரதான சாலையாக சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் பண்டிப்பூர் வனப்பகுதி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகம், கேரளாவுக்கு சென்று வருகின்றன.

தினமும் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வனப்பகுதி சாலையில் செல்ல, வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு முன்பு வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், வனப்பகுதி சாலையில் ஒரு இடத்தில் கூர்மையான தந்தம் கொண்ட ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாக இரவு, பகல் பாராமல் சுற்றி திரிகிறது. காய்கறி, நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளை மறித்து உணவு பொருட்களை சாப்பிடுகிறது.

திடீரென ஆக்ரோஷமாக மாறி வாகனங்களை துரத்துகிறது. கூர்மையான தந்தம் இருப்பதால் யானையை பார்த்து வாகன ஓட்டிகள் பயப்படுகின்றனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வனத்துறையினர் முயற்சித்தும் முடியவில்லை.






      Dinamalar
      Follow us