sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி; ஜன.,20ல் தண்டனை அறிவிப்பு

/

கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி; ஜன.,20ல் தண்டனை அறிவிப்பு

கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி; ஜன.,20ல் தண்டனை அறிவிப்பு

கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி; ஜன.,20ல் தண்டனை அறிவிப்பு

12


UPDATED : ஜன 18, 2025 02:53 PM

ADDED : ஜன 18, 2025 02:36 PM

Google News

UPDATED : ஜன 18, 2025 02:53 PM ADDED : ஜன 18, 2025 02:36 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை 20ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இன்று (ஜனவரி 18) நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவித்துள்ள அவர், தண்டனை வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, 'பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். இதில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்' என சஞ்சய் ராய் தனது தரப்பு கருத்தை முன் வைத்தார். இதற்கு, 'உங்களுக்கு பேச ஜனவரி 20ம் தேதி வாய்ப்பு தரப்படும் என்றார் நீதிபதி.






      Dinamalar
      Follow us