காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
ADDED : டிச 19, 2024 09:48 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். இதனால் அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.