sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குமாரசாமி சில்லரை அரசியல்: செலுவராயசாமி பாய்ச்சல்

/

குமாரசாமி சில்லரை அரசியல்: செலுவராயசாமி பாய்ச்சல்

குமாரசாமி சில்லரை அரசியல்: செலுவராயசாமி பாய்ச்சல்

குமாரசாமி சில்லரை அரசியல்: செலுவராயசாமி பாய்ச்சல்


ADDED : அக் 06, 2024 08:38 PM

Google News

ADDED : அக் 06, 2024 08:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்:

''மத்திய அமைச்சர் குமாரசாமி கூறும் கருத்துக்கு, பதில் அளித்தால் நாங்களும் பொய்யர் ஆகிவிடுவோம்,'' என்று, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கிண்டல் அடித்து உள்ளார்.

ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை. சமீபகாலமாக அதிகம் பொய் பேசுகிறார். அரசு, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அவர் கூறும் கருத்துகள் அனைத்தும் பொய். அந்த கருத்துக்கு பதில் அளித்தால், நாங்களும் பொய்யர் ஆகிவிடுவோம்.

ஜனநாயக அமைப்பில் மக்கள் பிரதிநிதியாக வருவது மிகவும் அரிது. முற்பிறவியில் செய்த புண்ணியத்தால், இப்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளோம்.

குமாரசாமி மத்திய அமைச்சராக உள்ளார். அவருக்கு நிறைய வேலை இருக்கும். ஆனால், அவர் சில்லரை அரசியல் செய்கிறார்.

சித்தராமையா சாதாரண தலைவர் இல்லை. மக்கள் விரும்பும் முதல்வர். குமாரசாமி 14 மாதங்கள் முதல்வராக இருந்து என்ன செய்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள குழுவை அமல்படுத்துவது உட்பட பல முக்கிய விஷயங்களை செய்து உள்ளோம். குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் முதல்வராக இருந்து, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

இதனால் மக்கள் காங்கிரசுக்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்தனர். கடந்த 30 ஆண்டுகளில் அதிக எம்.எல்.ஏ.,க்களுடன் வெற்றி பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ் தான். ஆனாலும் எங்கள் ஆட்சியை அகற்ற போராடுகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதால், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்பட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us