sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோரிக்கைகளை நிறைவேற்ற மனு கொடுக்க வந்த கும்பகர்ணன்

/

கோரிக்கைகளை நிறைவேற்ற மனு கொடுக்க வந்த கும்பகர்ணன்

கோரிக்கைகளை நிறைவேற்ற மனு கொடுக்க வந்த கும்பகர்ணன்

கோரிக்கைகளை நிறைவேற்ற மனு கொடுக்க வந்த கும்பகர்ணன்


ADDED : ஜன 02, 2025 06:16 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொட்டபல்லாபூர்: தொட்டபல்லாபூர் தாலுகாவில் குடிநீர், சாலை வசதி உட்பட பல பிரச்னைகள் உள்ளன. இதுகுறித்து அப்பகுதியினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் பல முறை மனு அளித்துள்ளனர். மனுவை வாங்கிக் கொண்டனரே தவிர, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனுக் கொடுப்பதும், வாங்குவதுமாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனால், அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்க, யுவ சஞ்சலனா சங்கம் சார்பில் திட்டமிட்டனர்.

இளைஞர்கள், ஊரக வளர்ச்சி பவனில் மனு அளிக்க சென்றனர். அவர்களில் ஒருவர், கும்பகர்ணன் வேடத்தில் காணப்பட்டார். இதை பார்த்த அதிகாரிகள் மிரண்டனர்.

அவர்கள் கூறுகையில், 'எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, பெங்களூரு ஊரக மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனியப்பாவிடம் மனுக் கொடுத்தோம். இது போன்று இரண்டு ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம்.

ஆனால், மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள், கும்பகர்ணன் போல துாங்கி வழிகின்றனர். இதை விமர்சிக்கவே கும்பகர்ணன் வேடமிட்டு வந்துள்ளார்' என்றனர்.

கும்பகர்ணன் வேடம் அணிந்து, மனுக் கொடுக்க வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us