ADDED : நவ 11, 2024 11:38 PM

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, சமூக நீதி, சமத்துவம் அடிப்படையில், பா.ஜ., செயல்பட்டு வருகிறது. எந்தவொரு சமூகத்தையும் ஓட்டு வங்கிக்காக, பா.ஜ., பயன்படுத்துவதில்லை. தோல்வியை நினைத்து, காங்., தலைவர்கள் முட்டாள்தனமாக புலம்பி வருகின்றனர்.
பிரஹலாத் ஜோஷி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
பா.ஜ.,வுக்கு தகுதி இல்லை!
மஹாராஷ்டிராவில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஊழல் பற்றி ஒரு வார்த்தை கூட, ஆளும் பா.ஜ., - சிவசேனா பேசுவதில்லை. காரணம், அக்கட்சியினரே ஊழலில் மூழ்கியுள்ளனர். எங்களை விமர்சிக்க பா.ஜ.,வுக்கு எந்த தகுதியும் இல்லை.
சுப்ரியா சுலே
லோக்சபா எம்.பி., - தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு
சுயமரியாதைக்காக ஓட்டு!
ஜார்க்கண்டில் வகுப்புவாதத்தை முன்னிறுத்தியே, பா.ஜ., பிரசாரம் செய்து வருகிறது. இதை அம்மாநில மக்கள் கண்டுகொள்ளவில்லை. மத நல்லிணக்கம், சமூக நீதி, சுயமரியாதைக்காக, 'இண்டி' கூட்டணிக்கு மீண்டும் ஓட்டளிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,