sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏர்போர்ட் ஓடுபாதைக்கு நிலம் எடுப்பு தீவிரம்

/

ஏர்போர்ட் ஓடுபாதைக்கு நிலம் எடுப்பு தீவிரம்

ஏர்போர்ட் ஓடுபாதைக்கு நிலம் எடுப்பு தீவிரம்

ஏர்போர்ட் ஓடுபாதைக்கு நிலம் எடுப்பு தீவிரம்


ADDED : ஜன 20, 2025 07:06 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: ''மைசூரு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும்,'' என, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மைசூரு மாவட்ட மேம்பாட்டு கூட்டத்தில், விமான நிலைய மேம்பாடு குறித்து முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஒரு வாரத்தில் முடிந்துவிடும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

மைசூரு - பெங்களூரு விரைவு சாலையை மேம்படுத்த, 711 கோடி ரூபாய் தயாராக உள்ளது. மூன்று மாதத்தில் இப்பணி துவங்கும். இவ்வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம், சுங்கவரியாக அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பிரச்னைக்கும் விரைவில் தீர்வு ஏற்படும்.

மைசூரில் அர்ஜுன் யானை நினைவாக, 'அர்ஜுனா சதுக்கம்' கட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியை, மாநில அரசும், மைசூரு மாநகராட்சியும் செய்து முடித்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us