sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: கேரளாவில் 19ம் தேதி கடையடைப்பு போராட்டம்

/

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: கேரளாவில் 19ம் தேதி கடையடைப்பு போராட்டம்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: கேரளாவில் 19ம் தேதி கடையடைப்பு போராட்டம்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: கேரளாவில் 19ம் தேதி கடையடைப்பு போராட்டம்

3


ADDED : நவ 15, 2024 10:28 PM

Google News

ADDED : நவ 15, 2024 10:28 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயநாடு: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து நிதி தரவில்லை என மத்திய அரசை கண்டித்து வரும் 19 ல் கேரளாவில் கடையடைப்பு போராட்டம் நடத்த மாநிலத்தை ஆளும் அரசும், எதிர்க்கட்சி கூட்டணியும் அறிவித்து உள்ளன.

கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மாதம் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது. ஆனால், நாட்டில் எந்த பேரிடரையும் தேசிய பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள எஸ்.டி.ஆர்.எப்., மற்றும் என்.டி.ஆர்.எப்., விதிமுறைகளில் மாற்றமில்லை. நிவாரண பணிகளை மேற்கொள்ள கேரள அரசிடம் போதிய நிதி உள்ளது என மத்திய அரசு கூறியது.

இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நிதி அளிக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 19ம் தேதி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அம்மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அறிவித்து உள்ளது.

அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து அதேநோளில் கடையடைப்பு போராட்டம் நடக்கும் என காங்கிரஸ் கூட்டணி அறிவித்து உள்ளது.அன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us