மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: சொல்கிறார் மம்தா!
மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: சொல்கிறார் மம்தா!
ADDED : ஜன 01, 2024 05:54 PM

கோல்கட்டா: நாட்டு மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் முக்கிய கட்சியான திரிணமுல் காங்கிரஸ் 1998ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி துவங்கப்பட்டது. இன்று 26 ஆண்டுகள் முடிவடைந்து, 27வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி துவங்கிய நாளில், தீய சக்திகளை எதிர்ப்போம் என கட்சி தொண்டர்களிடம் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: திரிணமுல் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஒவ்வொரு தொண்டருக்கும், ஆதரவாளர்களுக்கும் பணிவுடன் மரியாதை அளிக்கிறேன். இன்று திரிணமுல் காங்கிரஸ் குடும்பம் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தளராத ஆதரவின் பலத்தில் மாபெரும் ஜனநாயக நாட்டில் அனைவருக்காகவும் தொடர்ந்து போராடுவோம். எந்த தீய சக்திக்கும் சரணடைய வேண்டாம். அனைத்து பயங்கரவாதத்தையும் மீறி, நமது நாட்டின் பொது மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.