sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

/

வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

2


ADDED : செப் 22, 2025 09:22 AM

Google News

2

ADDED : செப் 22, 2025 09:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இதனால், வேளாண் பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள், ஏசி, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது.

இந்நிலையில் இன்று (செப் 22) சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவராத்திரி பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, நம்பிக்கையை கொண்டு வரட்டும். நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும்.

ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும். மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கிய உறுதியை அடைய நாம் ஒன்றிணைவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பஜனை பாடலை அனுப்புங்க!

பஜனை வீடியோ ஒன்றை வெளியிட்டு, மற்றொரு பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

நவராத்திரி என்பது பக்தியை பிரதிபலிக்கிறது. இந்தநேரத்தில், பண்டிட் ஜஸ்ராஜ் ஜியின் ஆத்மார்த்தமான ஒரு பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் ஒரு பஜனை பாடியிருந்தால் அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைப் பாடியிருந்தால், தயவுசெய்து அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் நாட்களில் அவற்றில் சிலவற்றை நான் பதிவிடுவேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us