sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் விவசாயிகளுக்கு 6 சதவீத வட்டியில் கடன்

/

பெண் விவசாயிகளுக்கு 6 சதவீத வட்டியில் கடன்

பெண் விவசாயிகளுக்கு 6 சதவீத வட்டியில் கடன்

பெண் விவசாயிகளுக்கு 6 சதவீத வட்டியில் கடன்


ADDED : பிப் 17, 2024 04:49 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்நடை


l 'அம்ருத ஸ்வாபிமானி' திட்டம் எனும் கால்நடை வளர்ப்போருக்கான திட்டம் நடப்பாண்டும் நீடிக்கும். 10,000 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

l அம்ருத மஹால், ஹள்ளிகார், கிலாரி இன பசுக்களின் இன பெருக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

l பால் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில், பசு, எருமை வாங்க பெண் விவசாயிகள் பெற்றுள்ள கடனை, சரியான நேரத்தில் அடைத்து விட்டால், மாநில அரசே 6 சதவீதம் வட்டியில் கடனுதவி வழங்கும்

l பன்றி, கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த, ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்

கால்நடை மருத்துவமனைகள்


l மாவட்டத்தில் உள்ள சிறப்பு கால்நடை மருத்துவமனைகள், தாலுகா அளவிலும் அமைக்கப்படும். முதற்கட்டமாக முக்கியமான 20 தாலுகாக்களில், கால்நடை மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்

l வாடகை கட்டடம், சிதிலமடைந்த கட்டடங்களில் செயல்படும், 200 கால்நடை மருத்துவமனைகளுக்கு, 100 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்

l மாநிலத்தில் ஆடு, மாடுகளை மேய்க்க புலம் பெயரும் மக்களின் நலனுக்காக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக புலம் பெயர்ந்த ஆடு மேய்ப்போர் மற்றும் அவர்களின் சொத்துகள் மீதான அடக்கு முறை தடுப்பு சட்டம் செயல்படுத்தப்படும்

l கால்நடை மேய்ப்பவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, அவர்களின் ஆடு, மாடுகளுக்கு அரசு டாக்டர்கள் தடுப்பூசி போடுவர்

அடையாள அட்டை


l ஒரு இடத்தில் இருந்து, வேறு இடத்துக்கு கால்நடைகளை மேய்க்க செல்வோருக்கு, அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

l கால்நடை மேய்ப்பவர்களின் பிள்ளைகளுக்கு, உறைவிட பள்ளிகளில் இடம் அளிப்பதுடன், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்

l புத்துார் கால்நடை மருத்துவ கல்லுாரி கட்டும் பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. நடப்பாண்டு கல்லுாரி செயல்பட துவங்கும்.






      Dinamalar
      Follow us